புகலிடக் ​கோரிக்கையாளர்கள் முகாமில் தீ

கிரேக்கத்திலுள்ள மிகப்பெரிய புகலிடக் ​கோரிக்கையாளர்கள் முகாமில் தீ

by Chandrasekaram Chandravadani 09-09-2020 | 11:59 AM
Colombo (News 1st) கிரேக்கத்தில் அமைந்துள்ள பாரிய புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தீ பரவியுள்ளது. லெஸ்பேஸிலுள்ள (Lesbos) மொரியா முகாமில் பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 25 தீயணைப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முகாமிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. மொரியா முகாமில் 13,000 இற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.