பிரேமலால் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

by Staff Writer 08-09-2020 | 12:17 PM
Colombo (News 1st) Update: 08/09/2020; 01.10 PM: மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, எதிர்க்கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------- மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (08) பிற்பகல் அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இதேவேளை, இன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது. முதலாவது அமர்வில் பிரேமலால் ஜயசேகர கலந்து கொள்ளவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியுடன் இன்று அமர்வில் கலந்து கொள்ளவுள்ள பிரேமலால் ஜயசேகர, பிற்பகல் வேளையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், இன்றைய அமர்வில் அமைச்சுகளுக்கான 28 ஆலோசனை செயற்குழுக்களும் நியமிக்கப்படவுள்ளன.