சீனாவிலிருந்து நாடு திரும்பிய ஊடகவியலாளர்கள்

பதற்றம் காரணமாக சீனாவிலிருந்து தாய்நாடு திரும்பிய அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள்

by Chandrasekaram Chandravadani 08-09-2020 | 9:33 AM
Colombo (News 1st) இராஜதந்திர பதற்றங்கள் காரணமாக சீனாவிலிருந்து அவுஸ்ரேலிய நாட்டு ஊடகவியலாளர்கள் இருவர் தாய்நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். குறித்த இருவரும் வௌியேறுவதற்கு முன்னர் சீன அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். 2 ஊடகவியலாளர்களும் வெவ்வேறு ஊடகங்களில் பணியாற்றுகின்ற நிலையில், தமது செய்தியாளர் வௌியிட்ட செய்திகள் தொடர்பிலோ, மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலோ விசாரிக்கப்படவில்லை என ஒரு ஊடகம் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியா - சீனா இடையிலான இராஜதந்திர உறவுகள் கடந்த சில வருடங்களாக விரிசலடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.