English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Sep, 2020 | 10:10 pm
Colombo (News 1st) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய கோட்டாபய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் பாதாள கோஷ்டி ஆகிய நூல்கள் இன்று வௌியிட்டு வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் சமல் ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
5 வருடங்களில் 7 புத்தகங்களை எழுத கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது நாட்டிற்கு பாரிய பிரச்சினையாகவுள்ள பாதாள கோஷ்டி மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின்படி பாரிய முயற்சிகைளை மேற்கொள்கிறோம். எமது நாட்டின் எதிர்கால சமூகத்தை இதில் இருந்து பாதுகாக்க வெண்டும். தொடரும் இதே நிலைமையில் எமது நாடு 5 அல்லது 10 வருடங்கள் சென்றால், எமது நாடு சோமாலியாவை விட மோசமான நிலமைக்கு மாறும் என பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் பொறுப்புடன் கூறுகின்றேன்
என அவர் பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய கோட்டாபய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் பாதாள கோஷ்டி ஆகிய நூல்கள் முதலில் தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.
பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடமும் இந்த நூல்கள் கையளிக்கப்பட்டன.
12 May, 2022 | 05:27 PM
10 May, 2022 | 05:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS