.webp)
Sputnik V
என்று பெயரிடப்பட்டுள்ளது. முதலில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடுப்பூசியை போட ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்திருப்பதாக மருத்துவ இதழான 'தி லான்செட்' தெரிவித்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 76 பேருக்கும் COVID-19 வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தியானது கொரோனாவில் இருந்து இயற்கையாகவே மீண்ட பிறகு மக்கள் கொண்டிருந்த நோயெதிர்ப்பு சக்தியை ஒத்திருந்தது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.