​வௌிநாட்டில்  பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 03-09-2020 | 7:37 PM
Colombo (News 1st) ​வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - காலி முகத்திடலில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் நான்கு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் வௌிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இலங்கை வௌிநாட்டு பட்டதாரிகள் ஒன்றியத்தினர் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.