மஹரகமயில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி

மஹரகமயில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

by Staff Writer 03-09-2020 | 3:25 PM
Colombo (News 1st) மஹரகம - நாவின்ன முச்சந்தியில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக வேகத்துடன் பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஏனைய செய்திகள்