அரசியலமைப்பு தயாரிப்பிற்கு குழு நியமிக்க அனுமதி

புதிய அரசியலமைப்பு தயாரிப்பிற்காக 9 பேர் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 03-09-2020 | 3:55 PM
Colombo (News 1st) புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக 9 உறுப்பினர்கள் கொண்ட விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளது. இது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தௌிவுபடுத்தினார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோகரா டி சில்வா, சஞ்ஜீவ ஜயவர்தன, பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், பேராசிரியர் நசீமா கமுர்தீன், கலாநிதி சர்வேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி சமன் ரத்வத்த, பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோரும் இந்த குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில கூறினார்.