மட்டக்குளியில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 02-09-2020 | 3:53 PM
Colombo (News 1st) கொழும்பு -15, மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு முச்சக்கரவண்டிகளும் லொறியும் மோதி இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்குளி பகுதியை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர். அவர்களில் 34 வயதான பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.