by Staff Writer 02-09-2020 | 4:08 PM
Colombo (News 1st) அபுதாபியில் உணவகமொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இலங்கை பிரஜை அந்த உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
அனர்த்தத்தில் மாத்தறை - வெலிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இளைஞரின் பூதவுடல், அபுதாபியிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் கடந்த 31 ஆம் திகதி காலை 10:15 அளவில் இடம்பெற்றுள்ளது.