அபுதாபியில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

எரிவாயு சிலிண்டர் வெடித்தது: அபுதாபியில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

by Staff Writer 02-09-2020 | 4:08 PM
Colombo (News 1st) அபுதாபியில் உணவகமொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இலங்கை பிரஜை அந்த உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அனர்த்தத்தில் மாத்தறை - வெலிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இளைஞரின் பூதவுடல், அபுதாபியிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் கடந்த 31 ஆம் திகதி காலை 10:15 அளவில் இடம்பெற்றுள்ளது.