by Staff Writer 01-09-2020 | 6:07 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளைய தினம் (02) அமைச்சரவையில் குறித்த வரைபு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.