ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ரஷ்ய போர்க்கப்பல்கள்

by Staff Writer 01-09-2020 | 5:46 PM
Colombo (News 1st) ரஷ்யாவின் இரண்டு போர்க்கப்பல்களும் விநியோகக் கப்பலொன்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. நீர்மூழ்கிக் கப்பலுக்கான இயலுமை உள்ள, உலகின் பிரபல போர்க்கப்பல்களில் ஒன்றான Admiral Tribuc' கப்பலும்   Admiral ‘Vinogradov’  மற்றும் ‘Boris Butoma’ கப்பல்களுமே வருகை தந்துள்ளன. விநியோகத் தேவைக்காகவும் நிர்வாகத்தினரின் ஓய்வை முன்னிட்டும் அவை இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ளன. COVID-19 தொற்றை ஒழிப்பதற்கான சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, இந்த கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி 3 கப்பல்களும் ஹம்பாந்தோட்டையிலிருந்து புறப்படவுள்ளன.