கொரோனா: 24 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்றுக்குள்ளான 24 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Staff Writer 01-09-2020 | 7:13 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 24 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 22 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து திரும்பிய ஒருவரும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,073 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 182 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 2,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.