English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Sep, 2020 | 8:26 pm
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் தொடரும் மழையுடனான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – கணேசபுரம் பகுதியில் வீசிய காற்றினால் 34 வீடுகளும் சமயபுரத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, பலமான காற்று வீசியதால் வாழை, தென்னை போன்ற பயன் தரும் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
வவுனியாவில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், மன்னாரில் நிலவும் சீரற்ற வானிலையால் 113 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளையிலும் சீரற்ற வானிலையால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பதுளை எல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெத்தேவெல கிராமத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இதன்போது, 16 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
02 Jun, 2022 | 04:16 PM
09 Apr, 2022 | 05:16 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS