by Fazlullah Mubarak 31-08-2020 | 8:11 AM
சிசு செரிய - பாடசாலை மாணவர்களின் பஸ் சேவைக்கு பயன்படும் பஸ்களுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தற்போது 10 பஸ்களுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசணைக்கு இணைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.
இவற்றை மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தவே இவ்வாறு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.