by Chandrasekaram Chandravadani 31-08-2020 | 3:34 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணக்கை 6 மில்லியனை அண்மித்துள்ளது.
கடந்த 4 நாட்களுக்குள் உலகளாவிய ரீதியில் ஒரு மில்லியன் பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகில் முதற்தடவையாக 78,000 இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் இந்தியாவில் பதிவாகியிருந்தனர்.
ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 59,94,855 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் மினிசொட்டா, அயோவா, வடக்கு டகோட்டா, தென் டகோட்டா உள்ளிட்ட பிராந்தியங்களில் அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்நாட்டில் 3 வாரங்களுள் 5 மில்லியன் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.