by Staff Writer 31-08-2020 | 2:37 PM
Colombo (News 1st) தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கண் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வௌியில் செல்லும்போது கண்ணாடிகளை பயன்படுத்துமாறு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் நோய் நிபுணர் முதிதா குலதுங்க குறிப்பிட்டார்.
வெப்பம் காரணமாக கண் பார்வைக்கான பகுதியில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமாயின் சிறிய எழுத்துக்களை பார்ப்பதில் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இதுவரை கண் நோயாளர்களின் பதிவில் அதிகரிப்பு ஏற்படவில்லை.
COVID - 19 கட்டுப்பாடுகளுடன் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதால் கண் நோய் பரவுதல் குறைவடைந்துள்ளதாகவும் விசேட கண் நோய் நிபுணர் முதிதா குலதுங்க தெரிவித்துள்ளார்.