இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

by Fazlullah Mubarak 30-08-2020 | 4:43 PM

கொரோனா நோயாளர்கள் மூவர் இன்று (30) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,998 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க, தொற்றுக்குள்ளாகிய 2,860 பேர் குணமடைந்துள்ளனதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.