பெலாரஸ் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தில் சிக்கல்

பெலாரஸில் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தில் சிக்கல்

by Staff Writer 30-08-2020 | 10:07 AM
Colombo (News 1st) ஐரோப்பிய நாடானா பெலாரஸில் (Belarus) அரசினால் வழங்கப்படும் அங்கீகாரமானது ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அந்நாட்டு அதிகாரிகளால் மீள பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து வௌிநாட்டு ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கிய ஊடகவியலாளர்களின் அங்கீகாரமே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது. இதில் BBC மற்றும் ரஷ்ய ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர். இந்த செயலை கண்டித்துள்ள சர்வதேச ஊடகங்கள், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் அரசினால் வழங்கப்படும் அங்கீகாரத்தை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளன. ஊடகவியலாளர்களை அடக்குவதற்கான முயற்சியாக இதனை காண்பதாக ஆஸ்திரியா தெரிவித்துள்ளது.