சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள்

by Staff Writer 30-08-2020 | 10:37 AM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 8,558 முறைப்பாடுகள் பதிவானதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், ஒப்பீட்டளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.