இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் யாழில் கைது

by Staff Writer 29-08-2020 | 6:04 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐந்தரை கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் பகுதியை சேர்ந்த 30 மற்றும் 32 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார். மீன்பிடிக்கு செல்லும் போர்வையில் குறித்த நபர்கள் தங்கம் கடத்த முயற்சித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.