அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும்

by Bella Dalima 28-08-2020 | 3:26 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா மாகாணங்களில் அதிக உஷ்ணம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் தற்காலிகமாக மழை பெய்யுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.