டி சொய்ஸா வைத்தியசாலையில்  பெண் ஒருவருக்கு 5 குழந்தைகள் பிறந்துள்ளன

by Bella Dalima 28-08-2020 | 3:41 PM
Colombo (News 1st) கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 05 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஐந்து சிசுக்களும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சாகரி கிரிவெந்தெனிய தெரிவித்தார். தாயின் உடல்நிலையும் ஆரோக்கியமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.