by Staff Writer 28-08-2020 | 5:56 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 12 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,830 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 2,986 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தொற்றுக்குள்ளானோரில் 144 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.