by Bella Dalima 28-08-2020 | 4:18 PM
Colombo (News 1st) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவர் 94 கிராம் 132 மில்லிகிராம் ஹெரோயினுடன் பொரளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பகுதியைச் சேர்ந்த 49 வயதான சிறைச்சாலை அத்தியட்சகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.