Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,984 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (26) மூவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாலைதீவிருந்து நாட்டை வந்தடைந்த இருவரும் கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 2,819 பேர் குணமடைந்துள்ளனர்.