கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்; 142 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

by Staff Writer 27-08-2020 | 4:00 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 11 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1830 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாட்டில் இதுவரை 2,984 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொற்றுக்குள்ளானோரில் 142 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி - முழங்காவில் 651 படைப்பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 பேர் இன்று வீடு திரும்பினர். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கடந்த 2 ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், குறித்த 60 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதனடிப்படையில், இன்றுடன் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில், இவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்போது, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான PCR பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஏனைய செய்திகள்