உமா ஓயா நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தில்

உமா ஓயா நிர்மாணப்பணிகளில் மேலும் 100 ஈரானிய தொழில்நுட்பவியலாளர்கள்

by Staff Writer 27-08-2020 | 10:23 AM
Colombo (News 1st) உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப்பணிகளுக்கான மேலும் சில ஈரானிய தொழில்நுட்பவியலாளர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். நிபுணர்கள், பொறியியலாளர்கள் அடங்கிய 100 பேர் நாட்டை வந்தடையவுள்ளதாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கான பணிப்பாளர் கலாநிதி சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார். ஈரானைச் சேர்ந்த 84 அதிகாரிகள் ஏற்கனவே உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர. இந்த திட்டத்தின் நிர்மாணப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கலாநிதி சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.