கோபால் பாக்லே - சபாநாயகர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - சபாநாயகர் மஹிந்த யாப்பா சந்திப்பு

by Staff Writer 27-08-2020 | 9:45 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று முற்பகல் சந்தித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார். இந்த சந்திப்பின் பின்னர் சபாநாயகர் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தேநீர் விருந்துபசாரமும் வழங்கினார். மஹிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராகப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது இராஜதந்திர சந்திப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதிய அமைச்சரவை அமைச்சர்களை அண்மையில் சந்தித்து விருந்துபசாரமொன்றை வழங்கியிருந்தார்.