யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 26-08-2020 | 10:21 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே பாதுகாப்பு ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். கொரோனாத்தொற்று அச்சம் உக்கிரமடைந்த கடந்த காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து தாம் பணியாற்றிய போதிலும் தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக தொழிற்சங்கமொன்று முன்வைத்துள்ளதாக அவர்கள் கவலை வௌியிட்டனர். தமக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கண்டித்தே யாழ். பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் சகல ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.