இதுவரை 2,981 பேருக்கு கொரோனா தொற்று

இதுவரை 2,981 பேருக்கு கொரோனா தொற்று; 2,819 பேர் குணமடைந்துள்ளனர்

by Staff Writer 26-08-2020 | 5:39 PM
Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 10 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,981 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகிய 150 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 2,819 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே, நாட்டில் இதுவரை 32 ,816 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 7058 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளதாக COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இதுவரை 2,11,090 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது.