ரத்கம வீடொன்றில் 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கண்டுபிடிப்பு

by Staff Writer 25-08-2020 | 5:50 PM
Colombo (News 1st) 10 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியுடைய ஹெரோயின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் ரத்கம பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது. நேற்று (24) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கமைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு T56 ரக துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், அவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

ஏனைய செய்திகள்