தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி

தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி

by Staff Writer 25-08-2020 | 2:25 PM
Colombo (News 1st) தொலைபேசி இலக்கத்தை மாற்றம் செய்யாது, தொலைத்தொடர்பு சேவை வழங்குனரை மாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. வாடிக்கையாளரின் தேவையின் அடிப்படையில் தொலைபேசியில் பயன்படுத்தும் சிம் அட்டையை மாற்றம் செய்யாது, தொலைத்தொடர்பு சேவை வழங்குனரை மாற்றம் செய்யும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் தொலைபேசி நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இந்திரஜித் ஹந்தபான்கொட குறிப்பிட்டுள்ளார்.