கொரோனா தொற்று: மேலும் 05 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்று: மேலும் 05 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 25-08-2020 | 4:13 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 05 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1816 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாட்டில் இதுவரை 2,959 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். நேற்றைய தினம் 6 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்