தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எப்பாவல இஹல கைது

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எப்பாவல இஹல கைது

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எப்பாவல இஹல கைது

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2020 | 5:20 pm

Colombo (News 1st) பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எப்பாவல இஹல, ஹல்மில்லேவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் எப்பாவல இஹல பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமை, ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியமை உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவராவார்.

அவரைக் கைது செய்யும் போது அவரிடம் இருந்து கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அநுராதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் மேலதிக சோதனையின் போது காரிலிருந்து வௌிநாட்டுத் தயாரிப்பிலான மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 03 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கோனஹேன – வேபட பகுதியைச் சேர்ந்த 39 வயதான சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 2 நாட்கள் தடுத்து வைப்பு உத்தரவின் பேரில் எப்பாவல பொலிஸாரினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்