மின்சார தடை: ஆய்வறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு 

நாடளாவிய ரீதியிலான மின்சார தடை: ஆய்வறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு 

by Staff Writer 24-08-2020 | 9:46 PM
Colombo (News 1st) நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இன்று (24) கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை நாளைய தினம் அமைச்சரினால் ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், நாளை மறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த 17 ஆம் திகதி நாடு பூராகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பேராசிரியர் ராகுல அத்தலகே தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. 9 பேரை கொண்ட இந்தக் குழுவின் அறிக்கை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்