கொழும்பு சிறையில் புதைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு 

by Staff Writer 24-08-2020 | 4:46 PM
Colombo (News 1st) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் புதைக்கப்பட்டிருந்த 19 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று (24) முற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொலைபேசிகளில் 03 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார். கையடக்கத் தொலைபேசிகள், பொலித்தீன் பையில் பாதுகாப்பாக சுற்றப்பட்டு குழிக்குள் புதைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.