'உப பிரதமர் பதவி குறித்து பேச்சுவார்த்தை இல்லை'

உப பிரதமர் பதவி தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை - G.L. பீரிஸ் 

by Staff Writer 24-08-2020 | 2:36 PM
Colombo (News 1st) உப பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என அமைச்சர், பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் அலுவலக செய்தியாளர் கூறினார். அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த வருடம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட முன்னர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்படவுள்ளது. 19 ஆவது திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இல்லை எனவும் அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.