யாழில் ஹெரோயினுடன் ஐவர் கைது

யாழில் ஹெரோயினுடன் ஐவர் கைது

by Staff Writer 23-08-2020 | 6:54 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (23) பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 60 கிராமுக்கும் அதிக ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டோரில் ஒருவர் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொக்குவில் மற்றும் இளவாழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்ந்தும் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.