Drone கெமராவை செலுத்திய சீன பிரஜை ஒருவர் கைது 

உயர் பாதுகாப்பு வலயத்தில் Drone கெமராவை செலுத்திய சீன பிரஜை ஒருவர் கைது 

by Staff Writer 23-08-2020 | 3:07 PM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியில் ட்ரோன் கெமராவை செலுத்திய சீன பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் குறித்த ட்ரோன் கெமரா பறக்கவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 40 வயதான குறித்த சீனப் பிரஜை நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.