IS பயங்கரவாதி என சந்தேகம்: டெல்லியில் ஒருவர் கைது

ISIS பயங்கரவாதி என சந்தேகிக்கப்படுபவர் டெல்லியில் கைது

by Bella Dalima 22-08-2020 | 4:27 PM
Colombo (News 1st) ISIS பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவர் புது டெல்லியில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். அபு யூசுப் (Abu Yusuf) என அறியப்படும் சந்தேகநபர் நேற்றிரவு 11.30 அளவில் டெல்லியின் Dhaula Kuan பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 15 கிலோகிராம் நிறையுடைய வெடிபொருட்கள், வெடிபொருளாக மாற்றப்பட்ட இரண்டு ப்ரெஷர் குக்கர்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியுடன் அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் இந்தியத் தலைநகர் மற்றும் உத்தர பிரதேஷுக்கு உயர்மட்ட பாதுகாப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், டெல்லியில் இருந்து நொய்டா எல்லையூடாக பயணிக்கும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகநபர் பல பகுதிகளுக்குச் சென்றுள்ளதுடன், மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.