கொரோனா தொற்றிலிருந்து மேலும் 09 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 09 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 22-08-2020 | 3:41 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 09 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,798 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 132 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 2,941 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர். துருக்கி, குவைத், சென்னை, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து வருகை தந்த 23 பேருக்கே நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நாட்டில் இதுவரை 2,00,148 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாத்திம் 1,590 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.