அலவ்வ - குருநாகல் வீதியில் விபத்து: ஐவர் பலி

அலவ்வ - குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் பலி

by Staff Writer 22-08-2020 | 3:35 PM
Colombo (News 1st) அலவ்வ - குருநாகல் வீதியின் இஹல வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4.05 அளவில் காரொன்றும் டிப்பரும் மோதி விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். பொத்துஹெர பகுதியில் வேலைத்திட்டமொன்றில் பணியாற்றும் ஊழியர்களே உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய ஐவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அலவ்வ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.