விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பு

அடுத்த மாத இறுதிப் பகுதியில் விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பு

by Staff Writer 22-08-2020 | 3:26 PM
 Colombo (News 1st) அடுத்த மாதத்தின் இறுதிப் பகுதியில் விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனத்திற்கொண்டு, சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.