ஹட்டனில் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மீட்பு

ஹட்டனில் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கால்வாயில் இருந்து மீட்பு

by Staff Writer 21-08-2020 | 4:51 PM
Colombo (News 1st) ஹட்டன் - டிக்கோயாவில் கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. டிக்கோயா தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் இன்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை சடலம் அடையாளம் காணப்படாததால், அது குறித்து தோட்ட மக்களுக்கும், பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஹட்டன் நீதவானின் பரிசோதனைகளுக்கு பின்னர், சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.