ரணிலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிப்பு

by Bella Dalima 21-08-2020 | 3:51 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 4 ஆம் திகதி மற்றும் 7 ஆம் திகதிகளில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவித்து இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் R.A.ரணவக்க ஆகியோரால், ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட முறைபாட்டிற்கு அமைய, முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார். நிஹால் ஜயதிலக்கவின் முறைப்பாட்டிற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க இன்று ஆணைக்குழுவில் ஆஜராகியிருக்க வேண்டும். எனினும், இன்று ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.