ஆணைக்குழுவில் ராஜித, மலிக், சுமந்திரன், மங்கள ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ராஜித, மலிக் சமரவிக்ரம, சுமந்திரன், மங்கள சமரவீர ஆகியோர் ஆஜர்

by Staff Writer 21-08-2020 | 4:10 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் இன்று ஆஜராகினர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான டொக்டர் நிஹால் ஜயதிலக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர்கள் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா , ஆர்.சம்பந்தன் , அனுரகுமார திசாநாயக்க, சட்டத்தரணி ஜே.சீ.வெலிஅமுண, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோருக்கும் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களமாக மாற்றப்பட்ட போது, சுயவிருப்பின் பேரில் விலகியவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டமை மற்றும் இசுறுமத் வீட்டுத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்து விளக்கமறியலில் வைத்தமை அரசியல் ரீதியாக இடம்பெற்றதாகத் தெரிவித்து டொக்டர் நிஹால் ஜயதிலக்கவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.