by Staff Writer 20-08-2020 | 12:38 PM
Colombo (News 1st) ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) நஞ்சேற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சுயநினைவிழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானப் பயணத்தின் போது நவால்னிக்கு சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
நவால்னிக்கு வழங்கப்பட்ட தேநீரில், ஏதோவொன்று கலக்கப்பட்டிருப்பதாக தாம் சந்தேகிப்பதாக, நவால்னியின் பேச்சாளர் கிரா யார்மிஷ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு நஞ்சேற்றப்பட்டதற்காக சிகிச்சையளிக்கப்படுவதை வைத்தியசாலை செய்தி ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை 44 வயதான நவால்னி முன்வைத்து வருகின்றவரென்பது குறிப்பிடத்தக்கது.