மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கவுள்ள பதவி தொடர்பில் தயாசிறி கருத்து

by Bella Dalima 20-08-2020 | 8:45 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் எவ்வாறான பதவி வழங்கப்படும் என்பது தொடர்பில் இந்நாட்களில் விவாதிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் குறித்து பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று கருத்துத் தெரிவித்த போதிலும், அவருக்கான பதவி தொடர்பில் வினவப்பட்ட போதிலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் பாராளுமன்றத் தொகுதியில் இன்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. சில காரணங்கள் உள்ளமையால் தௌிவாகக் கூற முடியாது. அதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்
என தயாசிறி ஜயசேகர பதிலளித்தார். தயாசிறி ஜயசேகர தனது அமைச்சின் முக்கியத்துவத்தை வௌிப்படுத்தும் வகையில், பத்திக் உடை அணிந்து பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார். பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் பொறுப்பு தயாசிறி ஜயசேகரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.