காத்தான்குடியில் இரு தரப்பினரிடையே மோதல் 

நொச்சிமுனை மீள்குடியேற்ற கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல்: இருவர் கைது

by Staff Writer 20-08-2020 | 7:43 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - காத்தான்குடி, ​நொச்சிமுனை மீள்குடியேற்ற கிராம பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (19) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மோதலில் பலத்த காயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களின் இரண்டு வீடுகள் நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு வீடு முற்றாக சேதமாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்